Sunday, March 15, 2009

மிளகாய் சட்னி



இட்லி, தோசை எல்லாம் நாம மறக்கறதுக்கு முன்னாடி =;) அதுக்கு ஏத்த ஒரு சைட் டிஷ் இன்னிக்கு பார்க்கலாம். தேவையான பொருட்கள், செய்முறை எல்லாமே ரொம்ப எளிது. சிறுவயதில் இந்த சட்னி வீட்டில் வைத்தால், இட்லி, தோசை எல்லாம் கணக்கில் அடங்காமல் உள்ளே இறங்கும். இப்பவும் ஒன்றும் குறைவில்லை :))

ஒரு சில நாட்கள் வரை கெடாமலும் இருக்கும். இந்த அவசர யுகத்தில் ஒரு நாளைந்து நாட்களுக்கு வருமாறு செய்து வைத்துக் கொள்ளலாம்.

தேவையானவை:

  • வரமிளகாய் - 10 - 12
  • பூண்டு - 4 பல்
  • சின்ன வெங்காயம் - 10 - 15
  • தக்காளி - 2
  • புளி - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
செய்முறை:

  • தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • வானலியில் நல்லெண்ணெய் (5 டீஸ்பூன்) விட்டு, காய்ந்த எண்ணெயில், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  • சிறிது நேரத்தில், மிளகாய் கலவையை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
  • எண்ணை வெளியில் வரும்வரை வதக்கினால் நன்றாக இருக்கும். இந்த காலத்தில் எங்கேப்பா நேரம்னு நீங்க சொல்றது கேக்குது :))அதனால், ஓரளவு பச்சை வாடை நீங்கினால் போதும்.
  • நாக்கில் நீர் ஊற வைக்கும் சுவையான மிளகாய் சட்னி ரெடி.


குறிப்பு: தாளித்தவுடன், நன்கு அறிந்த சிறிது பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கினால், சுவை மேலும் அதிகரிக்கும். சட்னி அளவும் கூடும் ... :)

5 comments:

வல்லிசிம்ஹன் said...

ம்ம்ம்ம். சட்டுனு செய்து சாப்பிடற சட்டினி தான். மிளகாய் இல்லாம
செய்ய முடியுமான்னு பார்க்கறேன் சதங்கா.
உங்க பதிவைப் பாத்துக் கொண்டெ இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டேன்:)

ராமலக்ஷ்மி said...

நான் வதக்கி அரைத்திடுவேன். நீங்கள் பச்சையாக அரைத்து பின் வதக்கச் சொல்லியிருக்கிறீர்கள். செய்து பார்த்துடலாம்:), கூட 4 இட்லி ரெடியா வச்சுக்கிட்டு:))!

சதங்கா (Sathanga) said...

வல்லிசிம்ஹன் said...

//ம்ம்ம்ம். சட்டுனு செய்து சாப்பிடற சட்டினி தான்.//

இது தான் 'சட்னி'யின் பெயர்க் காரணமோ :))

//மிளகாய் இல்லாம
செய்ய முடியுமான்னு பார்க்கறேன் சதங்கா.//

அப்படியே மிளகாயைக் குறைத்து, வதக்கி அரைத்து, தக்காளி சட்னி சட்னி ஆக்கிடுங்க.

//உங்க பதிவைப் பாத்துக் கொண்டெ இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டேன்:)//

வயிறு நிறைவதை விட, மனம் நிறைவது ரொம்ப சந்தோசம். நன்றி வல்லிம்மா.

சதங்கா (Sathanga) said...

ராமலக்ஷ்மி said...

//நான் வதக்கி அரைத்திடுவேன். நீங்கள் பச்சையாக அரைத்து பின் வதக்கச் சொல்லியிருக்கிறீர்கள். செய்து பார்த்துடலாம்:), கூட 4 இட்லி ரெடியா வச்சுக்கிட்டு:))!//

நீங்க செய்வது போல தக்காளி சட்னி செய்வார்கள் எங்கள் வீட்டில்.

இந்த முறையில் ட்ரை செய்து பாருங்கள் .... அதான் கூட நாலு இட்லி என்று சொல்லி அசத்திட்டீங்க ... நான் வேறு சொல்லணுமா.

radhapalanisamy said...

chatni romba nalla erunthadu