
மிக எளிய முறையில், சாஃப்டா (சத்தமே போடாம :))) ஒரு மெதுவடை செய்யலாம் வாங்க ...
தேவையானவை:
உளுந்து - 1 கப்
ப.மிளகாய் - 4
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 10-15 இலைகள்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- உளுந்தை, குறைந்தது இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
- க்ரைண்டர் அல்லது மிக்ஸியில் ப.மிளகாய் போட்டு ஒரு சுற்று அரைக்கவும்.
- இதனோடு ஊறிய உளுந்தைச் சேர்த்து அரைக்கவும். நடுவே உப்பை சேர்த்துக் கொள்ளவும்.
- வானலியில் எண்ணையிட்டு அடுப்பில் ஏற்றவும்.
- நன்கு அரைத்த உளுந்தில், கறிவேப்பிலை மற்றும் சீரகத்தை சேர்த்து, கையில் பிசறவும்.
- தண்ணீர் தொட்டு சிறு உருண்டைகளாக எடுத்து, உள்ளங்கையில் வைத்து தட்டி, தண்ணீர் தொட்டு துளையிட்டு, சூடான எண்ணையில் போடவும்.
- சிறிது நேரத்தில் திருப்பி விட்டு, பொன்னிறமாக ஆகும் சமயம் (அல்லது எண்ணை குமிழிகள் குறைந்த நேரம்) எடுத்து விடலாம்.
டிப்ஸ்:
- வடை கடினமாக இருக்கிறது என்றால், மாவில் தண்ணீர் தெளித்து, மீண்டும் கொஞ்ச நேரம் அரைக்கவும்.
- வடை எண்ணை குடிப்பது போல் இருந்தால், சிறிது அரிசி மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்..