Monday, July 21, 2008

கவுணி அரிசி



தேவையானவை:

  • ப்ரௌன் அரிசி - 1 கப்
  • சீனி - 1/4 to 1/2 கப்
  • தேங்காய் துறுவல் - 5 டீஸ்பூன்

செய்முறை:

  • அரிசியை, நீரில் இருபத்திநான்கு மணி நேரம் ஒரு பாத்திரத்தில் ஊற வைத்து, பின் நீரை வடிகட்டவும்.
  • மற்றொரு பாத்திரத்தில் அரிசியை இட்டு, அதற்கும் மேல் ஒரு செ.மீ. அளவிற்கு நீர் சேர்க்கவும்.
  • ப்ரெஷர் குக்கரை அடுப்பில் ஏற்றி, கீழே சிறிது நீர் விட்டு, அரிசி பாத்திரத்தை உள்ளே வைக்கவும்.
  • முதல் விசில் வந்தவுடன், சிம்மில் வைத்து இருபத்தி ஐந்து நிமிடங்கள் வேக விடவும்.
  • பின் அடுப்பை அனைத்து, ப்ரஷர் நீங்கியவுடன், அரிசியை நன்றாக மசித்து விடவும்.
  • சீனி, தேங்காய் துறுவல் இரண்டையும் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
  • சூடான, சுவையான கவுணி அரிசி தயார்.
குறிப்பு: ப்ரௌன் அரிசி இங்கு சீனர்கள் கடைகளில் கிடைக்கிறது.


Sunday, April 6, 2008

தேன்குழல் - NRI Version



தேவையானவை:

அரிசி மாவு : 4 1/2 cup
உளுத்த மாவு : 1 cup
சீரகம் : ஒரு teaspoon
பட்டர் : ஒரு teaspoon
உப்பு : தேவையான அளவு
எண்ணை : டீப் ஃப்ரை பண்ணும் அளவிற்கு

செய்முறை:
  • வாணலியில் எண்ணை ஊற்றி நன்கு காய விடவும்.

  • அரிசி மாவு, உளுத்த மாவு, உப்பு, சீரகம், பட்டர் எல்லாம் கலந்து, சிறிது சிறிதாய் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும். சப்பாத்தி மாவு அளவிற்கு consistency இருப்பது நல்லது.

  • சிறு சிறு உருண்டைகளாக மாவை எடுத்து, கொஞ்சம் பெரிய‌ கொழுக்கட்டை பிடிப்பது போல் பிடித்து வைத்து கொள்ளுங்கள்.

  • எண்ணை நன்கு காய்ந்ததும், ஒரு கொழுக்கட்டை மாவை எடுத்து, தேன்குழல் (முறுக்கு) கட்டையில் வைத்து இரண்டு அல்லது மூன்று எண்ணிக்கையில் பிழியவும்.

  • நன்கு நுரை தள்ளும் அலை போல எண்ணை இருக்க வேண்டும். அப்பொழுது தான் தேன்குழல் நன்றாக‌(பூசினாற்போல்) புஸ்ஸென்று இருக்கும்.

  • நுரை வேகம் குறையும்போது தேன்குழல்களைத் திருப்பிவிடுங்கள்.

  • நுரை மறையும் போது அல்லது சிலநொடிகள் முன்னரே அல்லது நிறம் மாறும் நேரம் தேன்குழலை எடுத்து விடலாம்.

  • நொடிகளில் நொறுக்கிட தீனி ரெடி :)
இந்தியாவில் தேன்குழல் மாவு என்றே முறையாகச் செய்வார்கள். இங்கு வந்து அது கைகூடக்கூடிய காரியமாகத் தெரியவில்லை. அதனால் அரிசி, உளுந்து மாவுகள். வீட்டில் செய்து பார்த்தோம், நன்றாக வரவே இப்பொழுது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

Saturday, February 16, 2008

குழிப் பணியாரம்



தேவையானவை:
  1. 1 1/2 கப் பச்சரிசி
  2. 1 1/2 புழுங்கல் அரிசி
  3. 1/2 கப் உளுத்தம் பருப்பு
  4. சிறிது வெந்தயம்
  5. வெல்லம் ‍
  6. உப்பு
  7. பச்சை மிளகாய்
  8. தேங்காய் துருவல்
  9. கறிவேப்பிலை

செய்முறை:

  • இரு அரிசிகளையும் சுமார் ஆறு மணி நேரம் ஊர வைக்கவும். உளுந்தையும், வெந்தயத்தையும் தனியாக ஊர வைக்கவும்.
  • பதினைந்து நிமிடங்கள் உளுந்தையும், வெந்தயத்தையும் க்ரைண்டரில் ஆட்டி, பின்பு அரிசிகளையும் சேர்த்து ஆட்டவும். மை போல‌ஆட்டாமல், அதற்குமுன்னாலேயே கிரைண்டரை நிறுத்தி விடவும்.
  • சிறிது உப்பு சேர்த்து, மாவைக் கரைத்து புளிக்க வைக்கவும்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கான்ஸப்ட் இங்கயும் அப்ளை பண்ணலாம் :)

முதல் மாங்காய்: இனிப்புப் பணியாரம்

  • வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து அடுப்பில் வைத்து, கரையும் வரை விடவும்.
  • புளித்த மாவை தேவையான அளவு எடுத்து, தேங்காய் துருவல் சிறிது சேர்த்துக்கொள்ளவும்.
  • அதில் வெல்லக் கரைசலையும் சேர்த்து ஓரளவுக்கு இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

இரண்டாவது மாங்காய்: வெள்ளை

  • வானலியில் சிறிது எண்ணைய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை போட்டுவெடித்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • புளித்த மாவைத் தேவயான அளவு எடுத்து, நீர், உப்பு, தேங்காய் துருவல் சிறிது, மற்றும் தாளித்தவைகளைச் சேர்த்துக் கலக்கவும்.

இப்ப பணியாரம்:

  • அடுப்பில் குழிப் பணியாரச் சட்டியை வைத்து, அனைத்துக் குழிகளிலும் சிறிதுஎண்ணைய் விடவும்.
  • சட்டி சூடானவுடன், சிறு குழிக் கரண்டியில் எடுத்து ஊற்றவும்.
  • சிறிது நேரம் கழித்து கருது ஒரு மூலையில் பிடித்து அப்படியே அலாக்காகதூக்கித் திருப்பி விடவும்.
  • சில விநாடிகளில் பணியாரம் ரெடி.