Thursday, January 29, 2009

உளுந்து வடை



மிக எளிய முறையில், சாஃப்டா (சத்தமே போடாம :))) ஒரு மெதுவடை செய்யலாம் வாங்க ...

தேவையானவை:


உளுந்து - 1 கப்
ப.மிளகாய் - 4
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 10-15 இலைகள்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
  • உளுந்தை, குறைந்தது இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
  • க்ரைண்டர் அல்லது மிக்ஸியில் ப.மிளகாய் போட்டு ஒரு சுற்று அரைக்கவும்.
  • இதனோடு ஊறிய உளுந்தைச் சேர்த்து அரைக்கவும். நடுவே உப்பை சேர்த்துக் கொள்ளவும்.
  • வானலியில் எண்ணையிட்டு அடுப்பில் ஏற்றவும்.
  • நன்கு அரைத்த உளுந்தில், கறிவேப்பிலை மற்றும் சீரகத்தை சேர்த்து, கையில் பிசறவும்.
  • தண்ணீர் தொட்டு சிறு உருண்டைகளாக எடுத்து, உள்ளங்கையில் வைத்து தட்டி, தண்ணீர் தொட்டு துளையிட்டு, சூடான எண்ணையில் போடவும்.
  • சிறிது நேரத்தில் திருப்பி விட்டு, பொன்னிறமாக ஆகும் சமயம் (அல்லது எண்ணை குமிழிகள் குறைந்த நேரம்) எடுத்து விடலாம்.

டிப்ஸ்:
  • வடை கடினமாக இருக்கிறது என்றால், மாவில் தண்ணீர் தெளித்து, மீண்டும் கொஞ்ச நேரம் அரைக்கவும்.
  • வடை எண்ணை குடிப்பது போல் இருந்தால், சிறிது அரிசி மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்..

Thursday, January 1, 2009

மா உருண்டை



அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!

மிக மிக எளிதான ஒரு ஸ்வீட் செய்யலாம் இன்னிக்கு.

தேவையானவை:

  • பாசிப்பருப்பு மாவு - 1 கப்
  • பொடியாக்கிய சர்க்கரை - 1 கப்
  • நெய் - 6 டீஸ்பூன்

செய்முறை:
  • பாசிப்பருப்பை நன்கு வறுத்து, மிஷின் அல்லது மிக்ஸியில் போட்டு பௌடர் ஆக்கிக் கொள்ளவும். இதிலிருந்து ஒரு கப் பாசிப்பருப்பு மாவு எடுத்துக் கொள்ளவும்.
  • பௌடர்ட் சுகர் இப்பொழுது கடைகளில் கிடைக்கிறது. இல்லை என்றால், சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பௌடர் ஆக்கிக் கொள்ளவும். இதிலிருந்து ஒரு கப் எடுத்து, பாசிப்பருப்பு மாவுடன் சேர்த்துக் கொள்ளவும்.
  • அடுப்பை மீடியம் சூட்டில் வைத்து, வானலியில் நெய் விட்டு சூடாக்கவும்.
  • மெல்லிய சூடான நெய்யில், மாவுக் கலவையை சேர்த்து கலக்கி, மாவில் மிதமான சூடு ஏறியவுடன், அடுப்பில் இருந்து இறக்கவும்.
  • கட்டிகள் இல்லாமல் மாவை நன்கு பிசறவும். பின், சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
  • அழகான சுவையான மா உருண்டை ரெடி.

Monday, July 21, 2008

கவுணி அரிசி



தேவையானவை:

  • ப்ரௌன் அரிசி - 1 கப்
  • சீனி - 1/4 to 1/2 கப்
  • தேங்காய் துறுவல் - 5 டீஸ்பூன்

செய்முறை:

  • அரிசியை, நீரில் இருபத்திநான்கு மணி நேரம் ஒரு பாத்திரத்தில் ஊற வைத்து, பின் நீரை வடிகட்டவும்.
  • மற்றொரு பாத்திரத்தில் அரிசியை இட்டு, அதற்கும் மேல் ஒரு செ.மீ. அளவிற்கு நீர் சேர்க்கவும்.
  • ப்ரெஷர் குக்கரை அடுப்பில் ஏற்றி, கீழே சிறிது நீர் விட்டு, அரிசி பாத்திரத்தை உள்ளே வைக்கவும்.
  • முதல் விசில் வந்தவுடன், சிம்மில் வைத்து இருபத்தி ஐந்து நிமிடங்கள் வேக விடவும்.
  • பின் அடுப்பை அனைத்து, ப்ரஷர் நீங்கியவுடன், அரிசியை நன்றாக மசித்து விடவும்.
  • சீனி, தேங்காய் துறுவல் இரண்டையும் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
  • சூடான, சுவையான கவுணி அரிசி தயார்.
குறிப்பு: ப்ரௌன் அரிசி இங்கு சீனர்கள் கடைகளில் கிடைக்கிறது.


Sunday, April 6, 2008

தேன்குழல் - NRI Version



தேவையானவை:

அரிசி மாவு : 4 1/2 cup
உளுத்த மாவு : 1 cup
சீரகம் : ஒரு teaspoon
பட்டர் : ஒரு teaspoon
உப்பு : தேவையான அளவு
எண்ணை : டீப் ஃப்ரை பண்ணும் அளவிற்கு

செய்முறை:
  • வாணலியில் எண்ணை ஊற்றி நன்கு காய விடவும்.

  • அரிசி மாவு, உளுத்த மாவு, உப்பு, சீரகம், பட்டர் எல்லாம் கலந்து, சிறிது சிறிதாய் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும். சப்பாத்தி மாவு அளவிற்கு consistency இருப்பது நல்லது.

  • சிறு சிறு உருண்டைகளாக மாவை எடுத்து, கொஞ்சம் பெரிய‌ கொழுக்கட்டை பிடிப்பது போல் பிடித்து வைத்து கொள்ளுங்கள்.

  • எண்ணை நன்கு காய்ந்ததும், ஒரு கொழுக்கட்டை மாவை எடுத்து, தேன்குழல் (முறுக்கு) கட்டையில் வைத்து இரண்டு அல்லது மூன்று எண்ணிக்கையில் பிழியவும்.

  • நன்கு நுரை தள்ளும் அலை போல எண்ணை இருக்க வேண்டும். அப்பொழுது தான் தேன்குழல் நன்றாக‌(பூசினாற்போல்) புஸ்ஸென்று இருக்கும்.

  • நுரை வேகம் குறையும்போது தேன்குழல்களைத் திருப்பிவிடுங்கள்.

  • நுரை மறையும் போது அல்லது சிலநொடிகள் முன்னரே அல்லது நிறம் மாறும் நேரம் தேன்குழலை எடுத்து விடலாம்.

  • நொடிகளில் நொறுக்கிட தீனி ரெடி :)
இந்தியாவில் தேன்குழல் மாவு என்றே முறையாகச் செய்வார்கள். இங்கு வந்து அது கைகூடக்கூடிய காரியமாகத் தெரியவில்லை. அதனால் அரிசி, உளுந்து மாவுகள். வீட்டில் செய்து பார்த்தோம், நன்றாக வரவே இப்பொழுது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

Saturday, February 16, 2008

குழிப் பணியாரம்



தேவையானவை:
  1. 1 1/2 கப் பச்சரிசி
  2. 1 1/2 புழுங்கல் அரிசி
  3. 1/2 கப் உளுத்தம் பருப்பு
  4. சிறிது வெந்தயம்
  5. வெல்லம் ‍
  6. உப்பு
  7. பச்சை மிளகாய்
  8. தேங்காய் துருவல்
  9. கறிவேப்பிலை

செய்முறை:

  • இரு அரிசிகளையும் சுமார் ஆறு மணி நேரம் ஊர வைக்கவும். உளுந்தையும், வெந்தயத்தையும் தனியாக ஊர வைக்கவும்.
  • பதினைந்து நிமிடங்கள் உளுந்தையும், வெந்தயத்தையும் க்ரைண்டரில் ஆட்டி, பின்பு அரிசிகளையும் சேர்த்து ஆட்டவும். மை போல‌ஆட்டாமல், அதற்குமுன்னாலேயே கிரைண்டரை நிறுத்தி விடவும்.
  • சிறிது உப்பு சேர்த்து, மாவைக் கரைத்து புளிக்க வைக்கவும்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கான்ஸப்ட் இங்கயும் அப்ளை பண்ணலாம் :)

முதல் மாங்காய்: இனிப்புப் பணியாரம்

  • வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து அடுப்பில் வைத்து, கரையும் வரை விடவும்.
  • புளித்த மாவை தேவையான அளவு எடுத்து, தேங்காய் துருவல் சிறிது சேர்த்துக்கொள்ளவும்.
  • அதில் வெல்லக் கரைசலையும் சேர்த்து ஓரளவுக்கு இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

இரண்டாவது மாங்காய்: வெள்ளை

  • வானலியில் சிறிது எண்ணைய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை போட்டுவெடித்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • புளித்த மாவைத் தேவயான அளவு எடுத்து, நீர், உப்பு, தேங்காய் துருவல் சிறிது, மற்றும் தாளித்தவைகளைச் சேர்த்துக் கலக்கவும்.

இப்ப பணியாரம்:

  • அடுப்பில் குழிப் பணியாரச் சட்டியை வைத்து, அனைத்துக் குழிகளிலும் சிறிதுஎண்ணைய் விடவும்.
  • சட்டி சூடானவுடன், சிறு குழிக் கரண்டியில் எடுத்து ஊற்றவும்.
  • சிறிது நேரம் கழித்து கருது ஒரு மூலையில் பிடித்து அப்படியே அலாக்காகதூக்கித் திருப்பி விடவும்.
  • சில விநாடிகளில் பணியாரம் ரெடி.

Friday, November 16, 2007

கோழி குழம்பு



தேவையானவை :

கோழி - 1/2 kg
சின்ன வெங்காயம் - 12
பூண்டு - 10 பல்
தக்காளி - 2
மஞ்சள் தூள்
மிளகாய் தூள் - 2 or 3 spoon


விழுதாய் அரைக்க :

Few பெ.சீரகம், கசகசா, பூண்டு - 3 பல், இஞ்சி, தேங்காய் துருவல் - 5 spoon

செய்முறை :

வானலியில் சிறிது எண்ணை ஊற்றி காய்ந்ததும் சீரகம், வெந்தயம் போட்டு, பிறகு பூண்டையும், வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் கழித்துக் கோழியை சேர்த்து வதக்கவும். பின்பு தக்காளியையும் வதக்கலில் சேர்க்கவும்.

கோழி நன்றாக வதங்கியபின் உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்து நாலைந்து நிமிடங்கள் கிளற விடவும். தேவையான அளவு நீர் சேர்த்து, சிறிது கிளறி மூடி வைக்கவும்.

கோழி முக்கால்வாசி வெந்தபின், அரைத்த விழுதைச் சேர்த்து, இரண்டு அல்லது மூன்று நிமிடம் கொதிக்க விடுங்கள்.

இவை இட்லி, தோசை, சாதத்திற்கு ஏற்ற side dish-ஆக இருக்கும்.

Sunday, November 11, 2007

Chettinad Kitchen - வலை உலகில்

வலையுல அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் !

எனக்கு எப்பவுமே சமையல் கலை மீது ஒரு ஈடுபாடு உண்டு. 'கல்யாணத்துக்கு அப்புறம் தானே' என்று, எனது அம்மா மாதிரி நீங்களும் கேக்கக் கூடாது ;-)

நாம் வழக்கமா செய்யும் உணவுகளின் ரெசிப்பிக்கள் ஏராளம். கதை, கவிதை-னு எழுதி ப்ளாகில் பதிந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிற மாதிரி, இவற்றையும் செய்யலாம் என்ற எண்ணத்தில் இந்த வலைத்தளத்தை நானும், எனது தங்கமணியும் ஆரம்பித்திருக்கிறோம்.

அப்படியே வட்டார வழக்கில் இருக்கும் பெயர்களையே பதார்த்தங்களுக்குத் தந்து, இந்திய சென்டிமென்ட் படி ஸ்வீட்ல ஆரம்பிக்கிறோம்.

வழக்கம் போல் வந்து வாசித்து, பிடிக்கும் பட்சத்தில் பின்னூட்டமிட்டுச் சொல்லுங்கள்.

நன்றி.